Thursday, October 11, 2007

பரிச்சை பதிவு!

தமிழ் வலைப்பதிவுகள் அரங்கம்...
பரிச்சை பதிவு....!!!!!

Wednesday, July 20, 2005

(ஈழத்) தமிழர் வரலாற்றில் ஜூலை......!


கிட்டத்தட்ட நான் மறந்து விட்ட நிலையில்... தினக்குரல் பத்திரிகையில் நான் வாசித்த திருப்பு முனைகளை ஏற்படுத்திய ஜுலை [ஞாயிறு தினக்குரல் 17 ஜூலை 2005 ] கட்டுரையில் இருந்து ஒரு பகுதி!


தமிழர் வரலாற்றில், வரலாற்றுக் கறைபடிந்த, வீரம் செறிந்த தடங்களை பதித்த ஜூலை மாத நிகழ்வுகள்.

19.07.1957: சிங்கள "ஸ்ரீ'க் கெதிராக தமிழரசு கட்சி சட்ட மறுப்பு போராட்டம்.
26.07.1957: பண்டாசெல்வா உடன்படிக்கை.
20.07.1960: ஐந்தாவது பொதுத்தேர்தல். திருமதிபண்டாரநாயக்க தலைமையில்சிறிலங்கா சுதந்திரக் கட்சி பதவியேற்பு: தமிழரசு கட்சி 21 இடங்களில் போட்டியிட்டு 16 இடங்களில்வெற்றி.
19.07.1970: புதிய அரசியல்அமைப்பை அமைக்க அரசியல் நிர்ணயசபையின் தொடக்க கூட்டம்.
15.07.1971: அரசியல் நிர்ணயசபையை விட்டுவெளியேற மறுத்த எம்.பி.மாட்டின்.
06.07.1974: கச்சதீவை இத்தியாவுக்கு கொடுப்பதற்கான உடன்படிக்கை.
27.07.1975: யாழ். மேயர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலை.
21.07.1977: பொதுத் தேர்தல் 4/5 பெரும்பான்மையுடன் ஐ.தே.க.ஆட்சியமைப்பு, 18 இடங்களை கைப்பற்றிய தமிழர் விடுதலைக்கூட்டணி பிரதான எதிர்க்கட்சியானது.
20.07.1978: புலிகளைதடை செய்வதற்கான பயங்கர வாததடைச்சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றம்.
01.07.1981: யாழ். நூல்நிலையம் எரிப்பு.
17.07.1981: யாழ். ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையம் மீதுதாக்குதல் 2 பொலிஸார்பலி; 4 பேர் காயம்.
02.07.1982: நெல்லியடியில் பொலிஸ்ஜீப் தகர்ப்பு: 4பொலிஸார்பலி.
15.07.1983: புலிகளின் மூத்ததளபதி லெப். சீலன் வீரச்சாவு.
23.07.1983: புலிகளின் தலைவர் பிரபாகரன் நேரில் களமிறங்கிய யாழ். திருநெல்வேலிதாக்குதல். 13 இராணுவத்தினர் பலி: ஆயுதங்கள் மீட்பு.
24.07.1983: வரலாற்றுக் கறைபடிந்த தமிழர்களுக்கெதிரான இனக் கலவரம். 1,000 க்கு மேற்பட்டோர் படுகொலை, படுகாயம் 4,000 பேர், வல்லுறவு 600 க்கு மேல்.
25.07.1983: வெலிக்கடைசிறையில் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன், தாமு கந்தையா உட்பட 53 பேர் கண்தோண்டி பின் வெட்டிக் கொலை.
08.07.1985: திம்பு பேச்சுவார்த்தைகள்.
05.07.1987: நெல்லியடி இராணுவமுகாம் மீது முதன் முதலில் கரும்புலித்தாக்குதல். கரும்புலி கப்டன் மில்லர் வீரச்சாவு: 100 க்கு மேற்பட்ட இராணுவம் பலி.
17.07.1987: ஜனாதிபதி ஜே.ஆர். தமிழரின் பிரச்சினை தொடர்பாக இந்தியதூதருடன் பேச்சு.
19.07.1987: விடுதலைப் புலிகளின்தலைவர் பிரபாகரனுடன் இந்திய இராஜதந்திரிகள் பேச்சு.
27.07.1987: இந்தியத் தூதுவர் டிக்ஸிற், ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவுடன் பேச்சு.
29.07.1987: இலங்கை இந்தியா ஒப்பந்தம்.
30.07.1987: இந்தியப்படை தமிழீழத்திற்கு வருகை.
10.07.1990: கட்டளைக் கப்பல் மீது கரும்புலி தாக்குதல். 3 கரும்புலிகள் வீரமரணம்.
11.07.1990: கொக்குவில் இராணுவ முகாம் புலிகளால் தகர்ப்பு.
10.07.1991: மட்டக்களப்பு முத்துகால படுகொலைகள்.
12.07.1991: திருமலை கிண்ணியடி படுகொலைகள்.
05.07.1992: ஆனையிறவு இயக்கச்சியில் வை.2 விமானம் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
26.07.1992: ஆகாய, கடல், வெளிச்சமர். கொக்குத் தொடுவாய் சமர்.
25.07.1993: மண்கிண்டி இராணுவமுகாம் ஆயுதக்கிடங்கு புலிகளால்கைப்பற்றப்பட்டது.
09.07.1995: நவாலி தேவாலயம் மீது விமானக்குண்டு வீச்சு இடம் பெயர்ந்து தங்கியிருந்த 247 பொது மக்கள் பலி.
13.07.1995: வலிகாமம் மீது இராணுவத்தின் முன்னேறிப்பாய்ச்சல் இராணுவநடவடிக்கை.
17.07.1995: காங்கேசன் துறைமுகத்தில்வைத்து "எடித்தர" கட்டளைக் கப்பல்தகர்ப்பு. கரும் புலிகள்தாக்குதல்.
18.07.1996: விடுதலைப் புலிகளின் ஓயாதஅலை 1 இராணுவநடவடிக்கை.
26.07.1996: இராணுவத்தினரின் "சத்ஜெய" இராணுவ நடவடிக்கை.
20.07.1998: முல்லைத்தீவு சுதந்திரபுரம் கிராமம் மீது கிபிர் குண்டு வீச்சு 25 பொது மக்கள் பலி.
24.07.2001: கட்டுநாயக்க விமானத்தளம் மீது புலிகள் தாக்குதல் 28 வான்கலங்கள் அழிப்பு.

நன்றி
தினக்குரல்

Thursday, July 14, 2005

பயனிகள் கவணத்துக்கு!!!! கொல்லிமலையில் குள்ளமனிதர்கள்!!

குள்ளமனிதர்கள் பெயரில் கொல்லிமலையில் நடைபெற்று உள்ள மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வவ்வால், தேவாங்கு போன்ற பறவை இனங்களையே குள்ளமனிதர்களாக காட்டி அறங்கேறிய மோசடி தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.

5.5 அங்குல உயரம் கொண்ட குள்ளமனிதர்கள் காடுகளில் பரவலாக வசித்து வருவதாக சமீபகாலங்களாக செய்தி பரப்பப்பட்டு வருகிறது. சிறப்பு பூஜையின் மூலம் வரவழைக்கப்படும் இந்த குள்ளமனிதர்களை வீட்டிற்கு கொண்டு வந்துவிட்டால், கேட்டது கிடைக்கும், நினைத்தது நடக்கும் போன்ற கவர்ச்சிகரமான வார்த்தைகளின் மூலம் மோசடிக்காரர்கள் சுற்றுலா பயணிகளை ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளனர்.

கடந்த ஒரு ஆண்டு காலமாகவே நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள காடுகளில் இந்த மோசடிகள் நடந்துள்ளது. இதற்கென கொல்லிமலை பகுதியில் புரோக்கர்கள் அதிகமாக உள்ளனர். இவர்கள் குள்ளமனிதர்கள் வசிக்கும் இடம் கொல்லிமலையில் உள்ள குகைகள் என்று கூறி சுற்றுலா பயணிகளை குகைக்கு அழைத்து செல்வதும், பின்னர் குகையில் உள்ள வவ்வால், தேவாங்கு போன்ற பறவைகளை குள்ளமனிதர்களாக ஜொடித்து காட்டுவதும் நடந்துள்ளது.

உண்மையை தெரிந்து கொண்ட சுற்றுலாபயணிகள் பணத்தை திருப்பி கேட்டால் அவர்களை மிரட்டி அங்கிருந்து அனுப்பிவிடுவார்கள்.

நன்றி
தினகரன்
http://www.dinakaran.com

ஆகவே கொல்லிமலைக்கு போகிறீர்களா கவணம்... ஏமாந்து விடாதீர்கள்...!

Friday, June 17, 2005

கட்டுமாணப் பணி.....

எனது வலைப்பதிவின் கட்டுமாணப் பணி இன்னும் நடை பெற்றுக் கொண்டு இருக்கின்றது!!!

Saturday, June 04, 2005

எனது முதல் பதிவு

வாங்க வாங்க எனது வலைப் பதிவு வடிவாகத் தெரிகிறதா... அடிக்கடி எனது வார்த்தைகளில் எழுத்துப் பிழை வரும் திருத்தி வாசியுங்க...

உங்கள் வரவு நல்வரவாகுக!